யூரோ 2020-இல் தங்க காலணியை வென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ..!

Default Image

யூரோ 2020 கால்பந்து தொடரில் போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல்டன் பூட் என்ற தங்க காலணி விருதை வென்றுள்ளார்.

யூரோ 2020 கால்பந்து தொடரில் அதிக கோல்களை அடித்ததால் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கோல்டன் பூட் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

யூரோ போட்டிகளில் முதன் முறையாக கோல்டன் பூட் விருதை ரொனால்டோ பெறுகிறார். இவர் யூரோ கால்பந்து தொடரில் ஒவ்வொரு தொடரிலும் ஒரு கோல் அடித்திருந்தார். மேலும், ஹங்கேரி மற்றும் பிரான்சுக்கு எதிராக தலா இரண்டு கோல்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் யூரோ கால்பந்து போட்டியில் போர்ச்சுக்கல் அணிக்காக 24 முறை களமிறங்கி அதிக போட்டிகளை எதிர்கொண்டுள்ளார். அதிக போட்டிகளை விளையாடிய பெருமையும் ரொனால்டோவை சேரும். இதன் காரணங்களால் இவருக்கு கோல்டன் பூட் விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்