‘ஜெய்ஹிந்த், ஜெய் தமிழ்நாடு’ எனக்கூறி உரையை முடித்த தமிழக ஆளுநர்…!

Default Image

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே நடைபெற்ற தனியார் மருத்துவமனை திறப்பு நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். ஆளுநர் அவர்கள்,  ரிப்பன் அகற்றி, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி  வைத்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், குமிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராசன், மாவட்ட ஆட்சியர் ஆல்வின் ஜான் வர்கீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன்பின் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள  கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும்  என்றும், முகக்கவசம் அணிதல், சானிடைசர் பயன்பாடு, சமூக இடைவெளியை கடைபிடித்தல், போன்ற நடைமுறைகளை கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், நிகழ்ச்சியின் முடிவில் நன்றி, வணக்கம் என்று தமிழில் பேசிய அவர், ஜெய்ஹிந்த், ஜெய் தமிழ்நாடு என்று கூறி உரையை நிறைவு செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்