அமலுக்கு வந்த புதிய தளர்வுகள்…! புதுச்சேரிக்கு இன்றுமுதல் பேருந்து சேவை…!

Default Image

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், தமிழக அரசு ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்து வருகிறது.

அதன்படி ஜூலை 19-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்றுமுதல் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்ததால், தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்து சேவை தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு 150 பேருந்துகளும் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு 600 பேருந்துகளும் இயங்கும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்