தோனி அடுத்த சீசன் விளையாடவில்லை என்றால் நானும் விளையாட மாட்டேன் – ரெய்னா

Default Image

அடுத்த சீசனில் தோனி விளையாடவில்லை என்றால் நானும் விளையாடமாட்டேன் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரெய்னா இருவரும் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2020- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்தனர். இதனையடுத்து ஐபிஎல் போட்டிகளில் மட்டும் இருவரும் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்கள். இவர்களுக்கிடையே இருக்கும் நட்புறவை பற்றி சொல்லியே தெரியவேண்டாம்.

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள  போட்டிகள் வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்,  அடுத்தாண்டு தோனி சிஎஸ்கே விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள் நிலையில் தோனி ஆடவில்லை என்றால் நானும் ஆடமாட்டேன் என ரெய்னா கூறியுள்ளார்.

இதுகுறித்து ரெய்னா பேசுகையில்,  இன்னும் சில ஆண்டுகள் என்னால் கிரிக்கெட் விளையாட முடியும். வருகின்ற ஐபிஎல் தொடர்களில் நான் சென்னை அணிக்காக மட்டுமே விளையாடுவேன். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில்  நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என நம்புகிறேன்.

அடுத்த சீசனில் தோனி விளையாடவில்லை என்றால் நானும் விளையாடமாட்டேன். நாங்கள் இருவரும்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறோம். இந்தாண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் நாங்கள் வென்றால் அடுத்தாண்டு தோனி விளையாட நான் அவரை சமாதானப்படுத்துவேன்” என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்