விரைவில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடிப்போம் – இயக்குனர் மணிரத்னம்

Default Image

விரைவில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடிப்போம் என மணிரத்னம் என்று கூறியுள்ளார். 

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்தாண்டு தாய்லாந்தில் வைத்து தொடங்கப்பட்டது. அதன் பின் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்ட படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து மீண்டும் தொடங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு 70 % விகிதம் முடிவடைந்துள்ளது. அதன் பிறகு கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மீண்டும் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இயக்குனர் மணிரத்னம் தற்போது அளித்துள்ள பேட்டியில், “பொன்னியின் செல்வன் படத்துக்கான இன்னும் ஒரு கட்ட படப்பிடிப்பு முடியவில்லை. தற்போதைய சூழ்நிலையில் படப்பிடிப்பை நடத்துவது கஷ்டம். அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கையும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டி உள்ளது. விரைவில் படப்பிடிப்பை முடிப்போம் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்