தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!!

அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை  வானிலை ஆய்வு மையம் தகவல். 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் வேலூர், திருவள்ளூர், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, பெரம்பலூர், கடலூர் , மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளது. 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.