அகமதாபாத்தில் ஜெகந்நாத் ராத் யாத்திரை நடத்த குஜராத் அரசு அனுமதி

Default Image

குஜராத்தில் கொரோனா நேர்மறை விகிதம் குறைவதால் பக்தர்கள் இல்லாமல் பகவான் ஜெகந்நாத் ரத யாத்திரை நடத்த குஜராத் அரசு அனுமதியளித்துள்ளது.

இந்த ஆண்டு அகமதாபாத்தில் ஜகந்நாத் ரத யாத்திரை (தேர் ஊர்வலம்) எடுக்க குஜராத் அரசு வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.அனைத்து கொரோனா  நெறிமுறைகளையும் பின்பற்றி ஊர்வலம் மேற்கொள்ளப்படும். த யாத்திரை நடக்கும் சமயத்தில் அகமதாபாத்தில் ஏழு மணி நேர ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும்.

பக்தர்கள் நேரடி ஒளிபரப்பைக் காணுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 2020 ஆம் ஆண்டில், தொற்றுநோய் காரணமாக ஊர்வலம் 143 ஆண்டுகளில் முதல் முறையாக ரத்து செய்யப்பட்டது.

ஊர்வலத்தில் பங்கேற்கும் நாற்பத்தெட்டு பேர், யாத்திரை எடுப்பதற்கு குறைந்தது 48 மணி நேரத்திற்கு முன்னதாக கொரோனா க்கான சோதனை செய்யப்படுவார்கள். அவர்கள் ஆர்டி-பி.சி.ஆர் கொரோனா சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அதன் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
empuraan controversy - kerla hc
Rohit sharma - MS Dhoni
japan megaquake
BJP State president K Annamalai
Heavy rains
ed chennai high court