சென்னை அணியில் தோனி மேலும் இரண்டு ஆண்டு தொடர்வார் – காசி விஸ்வநாதன்..!

Default Image

ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியில் தோனி மேலும் இரண்டு ஆண்டு தொடர்வார் என அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்தியாவிற்காக பல சாதனைகள் செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி அறிவித்தார். அதனையடுத்து ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

ஐபிஎல் போட்டி தொடங்கிய 2008 ஆம் ஆண்டிலிருந்து தோனி சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். சென்னை அணி தடை செய்யப்பட்டபோது புனே அணிக்கு தலைமை ஏற்றார் மீண்டும் சென்னைக்கு அனுமதி கிடைத்த போது அதில் இணைந்து கொண்டு மீண்டும் கேப்டனாக விளையாடினர்.

இந்த நிலையில், சென்னை அணியில் தோனி மேலும் இரண்டு ஆண்டு தொடர்வார் என்று அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகத்திற்கு பேட்டியளித்த காசி விஸ்வநாதன் ” தோனி முழுதகுதியுடன் இருக்கிறார். அவரை சென்னை அணியில் இருந்து விடுவிக்க காரணம் ஒன்றுமில்லை. தோனி மேலும் இரண்டு ஆண்டு சென்னை அணியில் தொடர்வார்” என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்