மேலும் 6 மாத கால அவகாசம் – ஸ்டெர்லைட் மனுதாக்கல்..!

Default Image

ஆக்சிஜன் உற்பத்தியை மேலும் 6 மாத காலம் மேற்கொள்ள அனுமதி கேட்டு ஸ்டெர்லைட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவிய நிலையில்,ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழந்து வந்தனர்.இதனால்,கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில்,தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு மட்டும் அனுமதி வழங்கபட்டது.இதனையடுத்து,ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தென்மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையில் மூன்று மாத காலத்திற்கு ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில்,நடப்பு மாதத்துடன் அதற்கான அனுமதி முடிவடைய உள்ளது.

இந்நிலையில்,தற்போது மேலும் 6 மாத காலம் ஆக்சிஜன் உற்பத்தி மேற்கொள்ள அனுமதி கேட்டு ஸ்டெர்லைட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்