கொரோனா பாதிப்பால் பாகிஸ்தான் தொடருக்கு 9 புதிய வீரர்களை தேர்வு செய்தது இங்கிலாந்து..!

Default Image

கொரோனா பாதிப்பால் பாகிஸ்தான் தொடருக்கு 9 புதிய வீரர்களை தேர்வு செய்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். 

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ஒரு நாள் தொடருக்கு பின்னர், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு வழக்கமான கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 3 கிரிக்கெட் வீரர்கள், 4 பணியாளர்கள் என 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதனால் தற்போது 7 பெரும் கொரோனாவுக்கான சிகிச்சையை பெற்று வருகின்றனர். மேலும், மீதமுள்ள வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன் அடுத்தபடியாக இங்கிலாந்து அணி வீரர்கள் பாகிஸ்தான் அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 தொடர்களில் விளையாட உள்ளனர். இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது பாகிஸ்தான் அணியுடன் விளையாட இருக்கும் ஒருநாள் தொடருக்கு புதிதாக 9 வீரர்களை தேர்வு செய்துள்ளது. காயத்தின் காரணத்தால் ஓய்வில் இருந்த பென் ஸ்டோக்ஸ் தற்போது விளையாட இருக்கும் ஒரு நாள் தொடரின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இங்கிலாந்து ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கும் வீரர்கள் பெயர்கள் பின்வருமாறு: பென் ஸ்டாக்ஸ்(கேப்டன்), ஜேக் பால், டேனி பிரிக்ஸ்,பிரைடன் கார்ஸ், கிராவிலி, பென் டக்கட், கிரேகரி, டாம் ஹெல்ம், வில் ஜாக்ஸ், டான் லாரன்ஸ், சகிப் முகமது, டேவிட் மலான், கிரைக் ஓவர்டன், மேட் பார்க்கின்சன், டேவிட் பெயின், பில் சால்ட், ஜான் சிம்சன், ஜேம்ஸ் வின்ஸ்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்