கூவம், அடையாறு ஆறு மறுசீரமைப்பு.., தலைமை செயலாளர் ஆலோசனை….!

கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக தலைமை செயலாளர் ஆலோசனை செய்து வருகிறார்.
சென்னையில் 2௦15-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்திற்கு பின் நீர்வழித்தடங்களில் இருந்த ஆக்கிரமிப்புக்களை அகற்ற முந்தைய அரசு தீர்மானித்தது. கூவம், அடையாறு ஓரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அங்கு குடியிருந்தோருக்கு வேறு இடத்தில் மறுகுடியமர்த்தப்பட்டனர்.
இந்நிலையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.