ஜூலை 19 முதல் முகக்கவசம் தேவையில்லை-இங்கிலாந்து..!

Default Image

ஜூலை 19 முதல் இங்கிலாந்து நாட்டில் முகக்கவசம் அணிய தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

உலக நாடுகளில் கொரோனா தொற்றுநோய் பெரிய அளவில் உயிர்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து நாட்டில் கொரோனாவால் பல பேர் உயிரிழந்துள்ளனர். அதனை தொடர்ந்து அங்கு மேற்கொண்ட கட்டுப்பாடுகள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியால் கொரோனாவின் தாக்கம் சற்று குறைய தொடங்கியது. இதனைத்தொடர்ந்து ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டு வீட்டு வசதித்துறை மந்திரி ராபர்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளதாவது, இங்கிலாந்து நாட்டில் வருகின்ற ஜூலை 19 முதல் கொரோனா கட்டுப்பாடுகளை சட்டபூர்வமாக அகற்ற திட்டமிட்டு வருவதாகவும், அதன் பிறகு முகக்கவசம் அணிய தேவையில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், அந்நாட்டில் தடுப்பூசி திட்டம் வெற்றியை பெற்றுள்ளதாகவும் அதனால் கட்டுப்பாடுகள் நீக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்