தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

Default Image

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. 

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், அரியலூர், கடலூர், பெரம்பலூர், திண்டுக்கல், தேனி ஆகிய 9 மாவட்டங்ள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளை (ஜூலை 7 ) ராணிப்பேட்டை,  தேனி , வேலூர்,  திருவள்ளூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும், 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்  ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்