#BREAKING : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய கர்நாடக முதல்வர்…!

Default Image

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா அவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு அரசு மேகதாது அணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், ஏற்கனவே தமிழக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணையாக இருந்தாலும், மற்ற எந்த அணையாக இருந்தாலும், கட்டுவதற்கு அனுமதி வழங்க முடியாது. தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது. தமிழகத்திற்கு எந்த நிலையிலும், தண்ணீர் பாதிப்பு ஏற்படாத வகையில் தான் எந்த நடவடிக்கையும் இருக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், கர்நாடகா முதல்வர் எடியூரப்பா அவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக முதல்வரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, மேகதாது அணை குறித்து இரு மாநில பிரதிநிதிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த தயார் என தெரிவித்துள்ளார்.

மேலும், மேகதாது அணை கட்டுவது தமிழகத்தை பாதிக்காது என்றும், இந்த பிரச்சனையை சுமுகமாக முடித்துக் கொள்ள வேண்டும் என்றும், மேகதாது அணை கட்டுவதால் தமிழகம், கர்நாடக ஆகிய இரு மாநிலங்களும் பயன்பெறும் என்றும்,, மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காது என் நம்புவதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்