#BREAKING : மதுரையில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மேலும் ஒரு குழந்தை மீட்பு…! போலீசார் தீவிர விசாரணை…!

Default Image

மதுரையில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட 2 வயது பெண் குழந்தை மீட்பு.

மதுரையில் ரிசர்வ் லைன் பகுதியில் இதயம் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதனை சிவக்குமார் என்பவர் நடத்தி வரும் நிலையில், இங்கு 70-க்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் பெண்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கொரோனா தொற்றால்  உயிரிழந்ததாக கூறி, மாணிக்கம் என்ற ஒரு வயது சிறுவனை அதிக விலைக்கு விற்றுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் அக்குழந்தையை மீட்டனர். அதனை தொடர்ந்து, ஸ்ரீதேவி என்பவரின் பெண் குழந்தையும் விற்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த குழந்தையையும் போலீசார் மீட்டுள்ளனர்.

இந்நிலையில், மதுரையில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட 2 வயது பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த குழந்தை இதயம் அறக்கட்டளையில் வாங்கப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சட்டவிரோதமாக குழந்தைகளை விற்பனை செய்த இதயம் அறக்கட்டளையின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்