தூத்துக்குடியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி!

Default Image
தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி வருகிற 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடக்கிறது. போட்டிகள் தருவை கூடைப்பந்து மைதானம், விகாசா பள்ளி, லசால் பள்ளி, கிரசண்ட் பள்ளி மைதானங்கள் ஆகிய 4 இடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் நடக்கிறது.
போட்டி தொடக்க விழா வருகிற 26-ந்தேதி மாலை 6 மணிக்கு தருவை மைதானத்தில் நடக்கிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமை தாங்கி, போட்டியை தொடங்கி வைக்கிறார். போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் பரிசு வழங்கி பாராட்டுகிறார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு கூடைப்பந்து கழக மாநில தலைவர் ராஜ்சத்யன், பொதுச்செயலாளர் ஆதவ்அர்ஜூனா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
பேட்டியின்போது, மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் சுஜேஷ்ராஜா, பொருளாளர் நார்ட்டன், துணை செயலாளர்கள் பாலமுருகன், பாலகிருஷ்ணன், முரளி ஆகியோர் உடன் இருந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்