மாடல் அழகி ஜெஸ்ஸிகாவை கொலை செய்த வழக்கு!கொலையாளிக்கு இறக்கம் காட்டும் ஜெஸ்ஸிகாவின் சகோதரி!

Default Image

சிறை நிர்வாகத்துக்கு ,மாடல் அழகி ஜெஸ்ஸிகா கொலையாளியை விடுவிப்பதில் தமக்கு எந்த தயக்கமும் இல்லை என அவரது சகோதரி சப்ரினா லால் (sabrina lal) கடிதம் எழுதியுள்ளார்.

1999ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி டெல்லியில் உள்ள ஹோட்டலில் பணிபுரிந்த மாடல் அழகி ஜெஸ்ஸிகா லால் சுட்டுக் கொல்லப்பட்டார். மது கொடுக்காத காரணத்தால் அவரை சுட்டுக் கொன்ற சித்தார்தா வஷிஸ்டா என்கிற மனு சர்மா கைது செய்யப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

15 ஆண்டுகளை அவர் திகார் சிறையில் கழித்த நிலையில் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே அவரை விடுதலை செய்வது தொடர்பாக ஜெஸ்ஸிகாவின் சகோதரி சப்ரினா லாலுக்கு சிறை அதிகாரி கடிதம் அனுப்பினார். இதற்கு பதில் அளித்துள்ள சப்ரினா லால், மனு சர்மாவை மன்னித்து விட்டதாகவும், அவரை விடுதலை செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்