சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடு…! ஐஐடி-யில் இருந்து வெளியேறுவதாக நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பிய உதவி பேராசிரியர்…!

Default Image

சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடு இருப்பதாக ஐஐடி-யில் இருந்து வெளியேறுவதாக நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பிய உதவி பேராசிரியர்.

சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடு இருப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அந்தவகையில், 2019-ஆம் ஆண்டு மாணவி பாத்திமா தற்கொலை செய்த போது ஐஐடியில் சாதி பாகுபாடு இருப்பதாக மாணவர்கள் புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில் மானுடவியல் மற்றும் சமூகவியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த விபின் என்பவர் தான் வேலை பார்க்கக்கூடிய துறையில் சாதி பாகுபாடு இருப்பதாகவும், இதை பலமுறை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றபோதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக, தான் பணியில் இருந்து வெளியேறுவதாகவும், வேறு நிறுவனத்திற்கு செல்கிறேன் என்று மின்னஞ்சல் மூலமாக ஐஐடி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது ஐஐடி நிர்வாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அந்த கடிதத்தில் மற்றொரு தகவலையும் தெரிவித்துள்ளார். இந்த ஐஐடியில் நிகழக்கூடிய சாதி ரீதியான பாகுபாடு குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிநல ஆணைய உறுப்பினர்களை உள்ளடக்கிய விரிவான ஒரு அமைப்பை ஏற்படுத்தி முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். ஆனால் உதவி பேராசிரியரின் கடிதம் தொடர்பாக, ஐஐடி நிர்வாகம் இதுவரை எந்த அதிகாரபூர்வ விளக்கத்தையும் அளிக்கவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்