சமையல் கேஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்வு!

Default Image

வீட்டில் உபயோகிக்கும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்ந்துள்ளது. 

கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் உள்ள விலைக்கேற்ப சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் டீசல், பெட்ரோலுக்கான விலை நிர்ணயிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அண்மையில் கூட பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஒரு முறை கேஸ் சிலிண்டரின் விலை அதிகரித்தது.

தற்பொழுதும் சென்னையில் 810 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த சிலிண்டர், மீண்டும் பிப்ரவரி மாதம் விலை அதிகரிப்பால் 835 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் பின் பத்து ரூபாய் குறைக்கப்பட்டு மீண்டும் 825 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் 25 ரூபாய் அதிகரித்து 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு 850 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மக்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்