கொதித்துக் கொண்டிருந்த கோழி சூப்பிற்குள் விழுந்த சமையல்காரர்…! 5 நாட்களுக்கு பின் உயிரிழப்பு…!

Default Image

ஈராக்கில் கொதித்துக் கொண்டிருந்த கோழி சூப்பிற்குள் விழுந்து சமையல்காரர் உயிரிழப்பு. 

வடக்கு ஈராக் மாவட்டமான ஜாகோவில் உள்ள ஒரு பெரிய திருமண மண்டபத்தில், 25 வயதான சமையல்காரர் இஸா இஸ்மாயில் ஒரு பெரிய விருந்துக்காக உணவு தயார் செய்து கொண்டிருந்துள்ளார். அவர் ஒரு பெரிய பானையில் கோழி சூப்பை தயாரித்துக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவர் தவறுதலாக கொதித்துக் கொண்டிருந்த கோழி சூப்பிற்குள் விழுந்துள்ளார். இதில் அவர் 70% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 5 நாட்களுக்கு பின் உயிரிழந்துள்ளார்.

இஸ்மாயீலின் தந்தை இதுகுறித்து கூறுகையில், இஸ்மாயில் பல வருட அனுபவமுள்ள பயிற்சி பெற்ற சமையல்காரர் என்று கூறியுள்ளார். மேலும் அவரது உறவினர் கூறுகையில், இஸ்மாயில் சுமார் இரண்டு ஆண்டுகளாக அந்த இடத்தில் பணிபுரிந்து வருவதாகவும், அவருக்கு ஆறு மாத சிறுவன் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்