ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை ஜூலை 31-க்குள் அமல்படுத்த வேண்டும் – உச்சநீதிமன்றம்

Default Image

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை ஜூலை 31-க்குள் அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு.

புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் துயரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து ஒரு வழக்கைப் பதிவு செய்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தேசிய தகவல் மையத்துடன் இணைந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மக்கள் குறித்த கணக்கெடுப்பு செய்து வலைதளங்களில் பதிவு செய்ய வேண்டும் என்றும், புலம்பெயர் தொழிலாளர்களின் உணவை உறுதி செய்ய உணவு தானியங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை ஜூலை 31-ஆம் தேதிக்குள் அமல்படுத்தாத மாநிலங்கள் அமல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்