4 கோடி பணம் கையாடல் : எச்.ராஜா மீதான புகார் குறித்து விசாரணை நடத்தப்படும்- எல்.முருகன்!

தேர்தல் செலவின பணம் பதுக்கியதாக எச்.ராஜா மீது அளிக்கப்பட்டுள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தனது தேர்தல் தோல்விக்கு காரணம் பாஜக நிர்வாகிகள் தான் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜ குற்றம் சாட்டிஇருந்தார். இதனை அடுத்து சிவகங்கை மாவட்ட பாஜக நிர்வாகிகள் எச்.ராஜாவின் குற்றசாட்டை நிராகரித்ததுடன் எச்.ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்தனர். மேலும், இவர் சட்டசபை தேர்தல் செலவுக்கு கட்சி மேலிடம் கொடுத்த பணத்தில் 4 கோடிபணத்தை பதுக்கி கொண்டார் எனவும், அதில் தற்பொழுது வீடு கட்டி வருகிறார் எனவும் ராஜினாமா செய்த பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பாஜகவின் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் காரைக்குடியில் விசாரணை நடத்தி உள்ளார். இந்த விசாரணையின் பொழுது எச்.ராஜா மீது பாஜக நிர்வாகிகள் மற்றும் சில தொண்டர்கள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த புகார் டெல்லியில் உள்ள பாஜக மேலிடம் வரை சென்றுள்ளது. எனவே தற்போது இது குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் தேர்தல் சமயத்தின் பொழுது பணம் கையாடல் தொடர்பாக எச்.ராஜா மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025