போலீசாரை மிரட்டிய செல்லப்பாண்டியன் இந்து முன்னணியில் இருந்து நீக்கம்…!

Default Image

போலீசாரை மிரட்டிய செல்லப்பாண்டியன் இந்து முன்னணியில் இருந்து நீக்கம்.

சேலத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், போலீசார் அவருக்கு ரூ.200 அபராதம் விதித்துள்ளனர்.

இந்நிலையில், அபராதம் செலுத்திய நபர், அவரது நண்பரும், இந்து முன்னணியின் சூரமங்கள ஒன்றிய செயலாளருமான செல்லப்பாண்டியனிடம் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த செல்லபாண்டியன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், வசூல் செய்த பணத்தை திரும்பி தருமாறும், இல்லையென்றால் சங்கை அறுத்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து,இது தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் வில்லியம் ஜேம்ஸ் கொடுத்த புகாரின்பேரில், செல்லப்பாண்டியன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், செல்லப்பாண்டியன் இந்து முன்னணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்