ஒரு சிலர் சுயநலமாக எடுத்த முடிவுகளால் தான் ஆட்சியை இழந்து நிற்கிறோம் – சசிகலா

ஒரு சிலர் சுயநலமாக எடுத்த முடிவுகளால் இன்றைக்கு ஆட்சியை இழந்து நிற்கிறோம் என சசிகலா சங்கரன் கோவிலை சேர்ந்த அதிமுக நிர்வாகி பூசுதுறை என்பவரிடம் தெரிவித்துள்ளார்.

சமீப நாட்களாகவே சசிகலா அவர்கள் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் அதிமுக நிர்வாகிகள் 3 பேருடன் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வகையில் சங்கரன் கோவிலை சேர்ந்த அதிமுக நிர்வாகி பூசுதுரை என்பவருடன் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவில் பூசுத்துரை என்பவர் சசிகலாவிடம் எங்கள் பஞ்சாயத்தில் எப்பொழுதுமே 700 ஓட்டு பதிவாகிக் கொண்டு இருக்கும். ஆனால் இந்த முறை தேர்தலில் 50 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளது. எனவே நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த சசிகலா, நான் கண்டிப்பாக வருவேன். நான் வரும்போது உங்கள் ஊருக்கு வருகிறேன். அதிமுகவும், அமமுகவும் இணைந்து தேர்தலை சந்தித்து இருந்தால், தற்போது நமது ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கும். ஒரு சிலர் சுயநலமாக எடுத்த முடிவுகளால் இன்றைக்கு ஆட்சியை இழந்து நிற்கிறோம்  என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக, ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 5 பேரை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.