குஜராத் ஆளுநரை நேரில் சந்தித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா!

உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

ஏற்கனவே கடந்த சில நாட்களாக குஜராத்தில் கனமழை பெய்து பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும் நிலையில், ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் நீரில் மூழ்ய நிலையில் உள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அப்பகுதியில் கொடுக்கப்பட்டு வந்த நிவாரணப் பணிகளும் தற்போது முடக்கி விடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் குஜராத் மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷா காந்தி நகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத் அவர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது இவர்களுடன் மாநில துணை முதல்வர் அவர்களும் உடன் இருந்துள்ளார்.

author avatar
Rebekal