#BREAKING: சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் அதிரடி கைது..!

Default Image

சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் சுஷ்மிதா கைது செய்யப்பட்டுள்ளார்.

சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், செங்கல்பட்டு சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை உடல்நிலை பாதிக்கப்பட்ட காரணத்தால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்ட சிவசங்கர் பாபா மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றம்  செய்யப்பட்டார். இன்று காலை முதல் சிவசங்கர் பாப்பாவுக்கு உடந்தையாக இருந்த பெண் பக்தர்கள் சுஷ்மிதா, நீராஜ் கருணாவிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சுஷ்மிதா பள்ளி மாணவிகளை மூளைச்சலவை செய்து சிவசங்கர் பாபாவிடம் அழைத்துச் சென்று இருப்பது விசாரணையில் தெரியவர சுஷ்மிதா கைது செய்யப்பட்டார்.

சஷ்மிதா சுஷில் ஹரி முன்னாள் மாணவி, இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு பிறகும் சிவசங்கர் பாபா பக்தராக அங்கேயே பணிபுரிந்து, குடும்பத்துடன் தங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

mp kanimozhi
Chennai Super Kings vs Kolkata Knight Riders toss
BJP MLA Nainar Nagendran
amitshah about dmk
AIADMK bjp
goat vijay gbu ajith