நேபாளம், பூடானில் அழிவை ஏற்படுத்திய வெள்ளம்..!

Default Image

நேபாளம் மற்றும் பூடானில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்கு பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக திபெத் பகுதியில் பருவமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக நேபாளத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேபாளம் மற்றும் திபெத்தின் எல்லையில் இருக்கும் சிந்துபால்சவுக் மாவட்டத்தின் மேலம்சி மற்றும் இந்திராவதி ஆகிய ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்கிருக்கும் வீடுகள், சாலைகள் ஆகியவை அடித்து செல்லப்பட்டன.

மேலும், இந்த வெள்ளத்தில் கரையோர மக்கள் பலர் அடித்து செல்லப்பட்டது  அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெள்ளத்தால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மக்கள் பலரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ராணுவ ஹெலிகாப்டர் வழியாக மேலம்சி பகுதி மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி வருகின்றனர்.

இதே போன்று பூடானிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு இருக்கும் லயா என்ற பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் பெரிய பாதிப்புகளை சந்தித்துள்ளது. மேலும், கார்டிசெப்ஸ் என்ற மருந்தை சேகரிக்க சென்ற மக்கள் இரவில் அங்கு தூங்கியதால் வெள்ளத்தில் சிக்கியிருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களை மீட்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்