இன்னும் இந்தியாவை 50 ஆண்டுகள் ஆட்சி செய்வதே பாஜகவின் இலக்கு !அமித் ஷா
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை வரும் 50 ஆண்டுகளுக்கு வெல்வதே பா.ஜ.க.வின் இலக்கு என கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில்கலந்து கொண்டு உரையாற்றிய அவர், சுதந்திரத்திற்குப் பின் 50 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்ததைப் போன்று, பா.ஜ.க.வும் 50 ஆண்டுகள் ஆளவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
உலக அரங்கில் இந்தியாவை ஒளிரச்செய்ய விரும்புவதாக கூறியுள்ள அவர், இதனை நிறைவேற்ற வேண்டுமானால் ஐந்து, பத்து வருடங்கள் போதாது என்றும், பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை வரும் 50 ஆண்டுகள் வெல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.