#Breaking:நீட் தேர்வின் தாக்கம் குறித்து நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையிலான குழு ஆலோசனை…!

Default Image
  • தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து,ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையிலான குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.அந்த வகையில், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த மாதம் பொறுப்பேற்றார்.

அதன்படி,நீட் தேர்வால் தமிழகத்தில் மாணவர்கள் அடைந்துள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் தமிழக அரசு குழுவை அமைத்துள்ளது.

இந்நிலையில்,சென்னை மருத்துவக் கல்வி இயக்குனகரத்தில்,ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில்,நீட் தேர்வு தொடர்பாக முதல் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது.

இக்கூட்டத்தில்,நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்