இந்திய அணியின் கேப்டனாக தவான் தேர்வு- பிசிசிஐ அறிவிப்பு..!

Default Image

இலங்கை சென்று விளையாடும் போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவானும், துணை கேப்டனாக புவனேஷ்வர் குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. அந்த அணியில் பும்ரா, ஷமி, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், முகமது சிராஜ், ராகுல், ரஹானே, புஜாரா, மயங்க் அகர்வால், சுப்மான் கில் உள்ளிட்ட
முக்கிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்திய அணி அடுத்த மாதம் இலங்கை சென்று 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில், இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவானும், துணை கேப்டனாக புவனேஷ்வர் குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய அணி வீரர்கள்:

ஷிகர் தவான் (கேப்டன்), புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), பிரித்வி ஷா, பட்டிக்கல், ருதுராஜ் , சூரியகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, நிதீஷ் ராணா, இஷான் கிஷன் (விக்கெட்கீப்பர்), சாம்சன் (விக்கெட்கீப்பர்), சாஹல், ஆர். சஹார், கே கவுதம், குர்ணால் பாண்டியா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேதன் சகரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்