சிலிண்டர் வெடித்து விபத்து – 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு!

Default Image

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள திக்ரி எனும் கிராமத்தில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளாகியதில் மூன்று குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள திக்ரி எனும் கிராமத்தில் வசித்து வரக்கூடிய நூருல் ஹசன் என்பவரது வீட்டில் உள்ள எல்பிஜி சிலிண்டர் நேற்று இரவு 10 மணியளவில் வெடித்துள்ளது. இந்த சிலிண்டர் வெடித்ததில் அவர் வசித்து வந்த இரட்டை அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்துள்ளது.இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் மூன்று பேர் குழந்தைகள் எனவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் அவர்கள் தெரிவிக்கையில், சம்பவம் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், தடவியல் குழுக்கள் மாதிரிகளை சேகரித்து வருவதாகவும் இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

மேலும் உயிரிழந்த 8 பேரின் உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவும், அவர்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தி சிலிண்டர் வெடித்ததற்கான காரணம் குறித்து அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்குமாறும் மாவட்ட நீதிபதி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
Sanju Samson
DMK MP A Rasa Speak about Waqf Act 2025
CM MK Stalin writes to PM Modi
Union minister Kiran Rijiju
Yashasvi Jaiswal
Encounter tn