கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை ஆற்றில் வீசிய உறவினர்கள்..!

Default Image

கொரோனாவால் இறந்தவரின் உடலை பாலத்தின் மீது நின்று ஆற்றில் வீசிய உறவினர்கள்.

உத்திர பிரதேசம் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் உடலை கோட்வால் என்ற இடத்தில் ராப்தி ஆற்றின் பாலத்தில் உறவினர்கள் இருவர் நின்றுகொண்டு ஆற்றில் வீசியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இச்சம்பவம் குறித்து பல்ராம்பூர் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

அதன்படி, இறந்தவர் பிரேம்நாத் என்றும் அவர் சோக்ராத்பேட்சித்ரதா என்ற நகரில் வசிப்பவர் என்றும் கண்டுபிடித்துள்ளனர். பிரேம்நாத் என்பவர் கடந்த 25 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக பல்ராம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். மேலும், இவர் 28 ஆம் தேதியன்று இறந்ததாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு, பிரேம்நாத்தின் உடலை புதைக்கும் படி அவரின் உறவினர்களிடம் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால், உறவினர்கள் அவரின் உடலை ஆற்றில் வீசியுள்ளதாக மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர். கொரோனாவால் இறந்தவரின் உடலை ஆற்றில் வீசியுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்