ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் புகார்..!

பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர்.

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறையில் ஆசிரியராக ராஜகோபாலன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது. மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

மாணவிகளிடம் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைந்ததுள்ளனர்.  இந்நிலையில் ஆசிரிய ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். இதனால் இதுவரை ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் இதுவரை 5 பேர் காவல்துறையில் நேரடியாக புகார் செய்துள்ளனர்.

author avatar
murugan