போலி பீடி விற்பனை செய்தவர்கள் கைது..,

மேலூர்: சையது பீடிகள் நிறுவன மேலாளர் முகமது அப்துல்லாவும், 5 பூமார்க் பீடி நிறுவன மேலாளர் அம்சாபாயும் மேலூர் பகுதியில் தங்களது நிறுவனம் பெயரில் போலியாக பீடிகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக மதுரை போலீஸ் எஸ்பியிடம் புகார் செய்தனர்.இதனை அடுத்து  நேற்று மேலூர் பஸ்ஸ்டாண்ட் பகுதி, மார்க்கெட் பகுதி, திருச்சி ரோடு ஆகிய இடங்களில் எஸ்பி உத்தரவின்பேரில் மேலூர் டிஎஸ்பி சக்கரவர்த்தி திடிரென  சோதனை நடத்தினார். இதில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள போலி பீடிகள், குட்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை விற்பனை செய்த 5 நபர்கள்  கைது செய்யப்பட்டனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment