தயாரிப்பாளர் பி.ஏ.ராஜூ மாரடைப்பால் காலமானார்..!
தெலுங்கு திரைப்பட உலகின் மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் தயாரிப்பாளர் பி.ஏ.ராஜூ மாரடைப்பு காரணமாக காலமானார்.
தெலுங்கு திரைப்பட உலகின் மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான பி.ஏ.ராஜூ மாரடைப்பு காரணமாக காலமானார். பி.ஏ.ராஜூ சண்டிகாடு, லவ்லி, விஷகம், பிரேமிக்குலு, உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். தயாரிப்பாளர் பி.ஏ.ராஜூக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தெலுங்கு திரையுலகில் இன்று ஒரு நாள் எந்த சினிமா செய்தியையும் பகிர வேண்டாம் என்று முடிவெடுத்துகிறார்கள்.
மேலும் மாரடைப்பால் காலமான பி.ஏ.ராஜூ மறைவுக்கு, மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர், அஞ்சலி, போன்ற பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.