ஜூன் முதல் வாரத்தில் கொரோனா பரவல் உச்சக்கட்டத்தை எட்டும் -ஸ்டாலின் ..!

Default Image

இந்த மாத இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் கொரோனா பரவல் உச்சக்கட்டத்தை எட்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் என முதல்வர் தெரிவித்தார்.

நாளை மறுநாளுடன் தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடைகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ குழுவினருடன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் இந்த மாத இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் கொரோனா பரவல் உச்சக்கட்டத்தை எட்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தமிழகத்தில் கொரோனா ஒரு அளவுக்கு குறைந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக தொற்று பரவ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தவும், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும் மருத்துவக்குழு தமிழக அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்