#BREAKING: தமிழகத்தில் 9 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு- ராதாகிருஷ்ணன்..!

Default Image

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கருப்பு பூஞ்சை நோய் குறித்து விளக்கம் அளித்தார். அதில், கருப்பு பூஞ்சை பாதிப்பை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை. தனியார் மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டால் அரசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் 7 பேர் உட்பட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்தி விடலாம். கருப்பு பூஞ்சை பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு விதிகளை மக்கள் முறையாக பின்பற்றினால் மட்டுமே கொரோனா நோய் பரவல் குறையும். தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் இதுவரை உயிரிழப்பு ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்