செவ்வாய் கிரகத்திற்கு சீனா அனுப்பிய தியான்வென் – 1 விண்கலம் எடுத்த புகைப்படம் வெளியீடு!

Default Image

சீனா மூலமாக செவ்வாய் கிரகத்துக்கு கடந்த 15ஆம் தேதி அனுப்பப்பட்ட தியான்வென் -1 விண்கலம் எடுத்த செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஆரம்ப காலத்தில் வல்லரசு நாடுகள் நிலவு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபடத் தொடங்கியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளதுடன், தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா அனுப்பிய விண்கலம் கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது.

இந்த விண்கலம் ஆறு சக்கரங்கள் கொண்ட ரோவர் கருவியுடன் அனுப்பப்பட்டது, இந்த விண்கலம் 240 கிலோ எடை கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் பாறை தன்மைகள் நீர் ஆகியவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டது. கடந்த 15-ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் இது வெற்றிகரமாக தரையிறங்கியது என சீனா சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலமாக செவ்வாய் கிரகத்தை புகைப்படம் எடுத்து தற்பொழுது அனுப்பி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்