சென்னையில் நேற்று மட்டும் 5,428 வாகனங்கள் பறிமுதல்.., 75 கடைகள் மூடல் ..!

Default Image

சென்னையில் நேற்று ஊரடங்கு விதிமுறைகளை மீறுயவர்களின் 5,428 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 24-ஆம்தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும் பலரும் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் அதிகளவில் வெளியில் சுற்றி வந்தனர்.

இதனால், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடைகள் காலை 10 மணிக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், மாவட்டத்திற்குள் செல்லவும் இ.பதிவு சேவை கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் நேற்று ஊரடங்கு விதிமுறைகளை மீறுயவர்களின் 5,428 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஊரடங்கு விதிகளை மீறி வெளியில்  சுற்றித்திரிந்த 3,422 பேர் மீதும், கவசம் அணியாமல் வெளியில் வந்த 3,518 பேர் மீதும், சென்னையில் நேற்று சமூக இடைவெளியை கடைபிடிக்காத 391 பேர் மீதும் சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், கொரோனா தடுப்பு விதிகளை மீறிய 75 கடைகள் மூடப்பட்டன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்