12 ஆம் வகுப்பு தேர்வு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.. சிபிஎஸ்இ விளக்கம்..! 

Default Image

12 ஆம் வகுப்பு தேர்வு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 

கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களில் சிலர் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யக் கோரி வருவதால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக எந்தவொரு முடிவும்  எடுக்கப்படவில்லை எனவும் இந்த விஷயத்தில் எடுக்கப்பட்ட எந்தவொரு முடிவும் அதிகாரப்பூர்வமாக மக்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று சிபிஎஸ்இ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொரோனா அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாகவும், 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும் சிபிஎஸ்இ அறிவித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகள் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடத்தப்படும்.

 ஜூன் 1-ஆம் தேதிக்கு பிறகு நிலைமை குறித்து மறுஆய்வு செய்யப்படும் எனவும்  தேர்வுகள் நடத்தப்படுவதற்கு முன்னர் மாணவர்களுக்கு 15 நாள்களுக்கு முன் அறிவிக்கப்படும் என்று சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்