உங்கள் குடும்ப அட்டையில் ஏதேனும் பிழைகள் உள்ளதா?இதோ உங்களுக்கான வாய்ப்பு!தமிழகம் முழுவதும் குறை தீர்வு முகாம்!
தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமையன்று, குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்காக குறை தீர்வு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருவாய் வட்டங்கள் வாரியாக இந்த முகாம்கள் நடைபெறும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம் ஆகியவற்றை செய்வதோடு, ரேஷன் கடைகளின் குறைகள் குறித்தும் தெரிவிக்கலாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் குறித்த புகார்களையும் இந்த முகாமில் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.