முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆர்.பி.சிங் தந்தை கொரோனா காரணமாக காலமானார்..!!

Default Image

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆர்.பி.சிங் தந்தை தந்தை சிவ பிரசாத் சிங் கொரோனா பாதிப்பு காரணமாக காலமானார்.

நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்ற என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து, உயிரிழந்து வருகின்றார்கள்.

அந்த வகையில். இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆர்.பி.சிங் தந்தை தந்தை சிவ பிரசாத் சிங் கொரோனா பாதிப்பு காரணமாக காலமானார். இதுகுறித்து ஆர்.பி.சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” எனது தந்தை ஷிவ் பிரசாத் சிங் காலமானதை ஆழ்ந்த வருத்தத்துடனும் சோகத்துடனும் தெரிவிக்கிறோம். அவர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டு மே 12 ஆம் தேதி காலமானார்” என்று தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்