#BREAKING: ஐபிஎல் தொடரை ரத்து செய்ய கோரி வழக்கு..!

Default Image

கொரனோ பரவி வருவதால் ஐபிஎல் தொடர் ரத்து செய்யக் கோரி மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருந்தபோது 13-வதுஐபிஎல் தொடரை ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு 14-வது ஐபிஎல்தொடர் கடந்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் கொரோனா அதிகம் பரவி வருவதால் போட்டிகளைப் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்காமல் வீரர்கள் மட்டும் விளையாடி வருகின்றனர்.  இதற்கிடையில், கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கும், சென்னையில் சார்ந்த இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் நேற்று பெங்களூர், கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டது.  இந்நிலையில், ஐபிஎல் போட்டி ரத்து செய்யாவிட்டாலும் ஐபிஎல் தொடரை ஒத்தி வைக்க வேண்டும் என மும்பை நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்