மதுரையில் 8 பெட்டி ரெம்டெசிவிர் மருந்துகள் திருட்டு..!

Default Image

மதுரையில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 8 பெட்டி ரெம்டெசிவிர் மருந்துகள் திருடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் 2-வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் அதற்கான மருந்துகள் தட்டுப்பாடு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்தானது கொரோனா வைரஸிக்கு மிக முக்கியநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.

இதனால் இதன் தட்டுப்பாடு மிக அதிகளவில் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மாவட்டத்தை சார்ந்த கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மதுரையின் சிறப்பு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு மதுரையில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 8 பெட்டி ரெம்டெசிவிர் மருந்துகள் திருடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை வளாகத்திலேயே மருந்து திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் 8 பெட்டி ரெம்டெசிவிர் மருந்து மதுரையில் திருடப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்