அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய போர்விமானங்களின் ஒத்திகை!மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் பார்வை

Default Image

போர் விமானங்களின் பயிற்சி இந்திய-சீன எல்லைப் பகுதியான அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்றது. இதனை மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். சியாங் எனுமிடத்தில் அமைந்துள்ள சவுபா விமானப் படைத்தளத்தில் , su 30 போர் விமானங்கள், ஜாகுவார், மற்றும் எம்.ஐ.ஜி 21 ஹெலிகாப்டர்களின் கண்கவர் ஒத்திகைகள் நடைபெற்றன.

அஸ்ஸாமின் திபுகர் பகுதியில் நடைபெற்ற ககன் சக்தி போர் ஒத்திகையையும் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். விமானப் படை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யவும் எல்லை பாதுகாப்பை ஆய்வு செய்யவும் நிர்மலா சீதாராமன் விமானப்படைத் தளங்களுக்கு நேரில் சென்று வருவதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்