“கொண்டாட வேண்டிய நேரம் அல்ல.. போராட வேண்டிய நேரம்”- வெற்றிக்கு பின் பினராயி விஜயன் பேட்டி!

Default Image

“இது கொண்டாட்டத்துக்கான நேரம் அல்ல. கொரோனாவை எதிர்த்து போராட வேண்டிய நேரம்” என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் கேரளாவில் ஒரு தொகுதியில் கூட பாஜகவினர் முன்னிலை பெறவில்லை. 99 இடங்களில் 81 தொகுதிகளில் இடதுசாரியினர் வெற்றிபெற்றுள்ளனர். 41 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கும் நிலையில், 37 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

இதில் கேரள சுகாதார துறை அமைச்சர் கே கே ஷைலஜா, 61,000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிரடியாக வெற்றிபெற்றுள்ள நிலையில், முதல்வர் பினராயி விஜயன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னணி வகிக்து வந்தார். தற்பொழுது அவர் 50,123 வாக்குகள் வித்தியாசத்தில் தர்மதம் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராயி விஜயன், “கேரளா தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் இது கொண்டாட்டத்துக்கான நேரம் அல்ல. கொரோனாவை எதிர்த்து போராட வேண்டிய நேரம். தொடர்ந்து போராடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்