பெருபான்மையை தாண்டிய திரிணாமுல் காங்கிரஸ்… நந்திகிராம் தொகுதியில் மம்தா பின்னடைவு!

Default Image

மேற்கு வங்க தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை பெற்றது.

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு மட்டும் எட்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி முன்னிலை வகித்து வருகிறது.

அதாவது, திரிணாமுல் காங்கிரஸ் 184 இடங்களிலும், பாஜக 102 இடங்களிலும், காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி 2 இடங்களும், மற்றவைகள் 3 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், மேற்குவங்க நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி முன்னிலை பெற்று வரும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை சில சுற்றுகள் மட்டும் எண்ணப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து சுற்றுகளில் எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்