ஹெச்.ராஜாவின் சர்ச்சை பதிவு : மறுபடியும் அட்மின் செய்த செயல் என்று சொல்லுவார் !அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தி.மு.க. குறித்த ஹெச் .ராஜாவின் கருத்து தரம் தாழ்ந்தது என்று தெரிவித்துள்ள நிலையில், இதற்கும் ஹெச்.ராஜாவிடம் இருந்து அட்மின் தவறு என்று பதில் வரக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் ஹெச்.ராஜா ட்விட்டர் பக்கத்தில், “தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே.” என தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர் கலைஞரையும், திமுக மாநிலங்களவை எம்.பி கனிமொழி அவர்களையும் கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.