பா.ஜ.க.வின் நன்மதிப்பை நீதிபதி லோயா மரணம் தொடர்பாக வழக்கு கெடுக்கும் நோக்குடன் தொடரப்பட்டது! அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத்
மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத்,நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கு பா.ஜ.க.வின் நன்மதிப்பை கெடுக்கும் நோக்குடன் தொடரப்பட்டது என கூறியுள்ளார்.
தீர்ப்பு குறித்த தகவல்களுடன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை மக்கள் புறக்கணித்துவிட்டதால் நீதிமன்றத்தின் மூலம் அரசியல் செய்ய முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
இதனிடையே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் உடனடியாக ரவிஷங்கர் பிரசாத்துக்கு கிடைத்தது எப்படி என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. உச்சநீதிமன்ற இணையதளம் முடங்கியிருப்பதால் வழக்கறிஞர்களே தீர்ப்பு நகலை பெறாத நிலையில், மத்திய அமைச்சரின் கைகளுக்கு மட்டும் தீர்ப்பின் நகல் எப்படி கிடைத்தது என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.