#Breaking: ஜூலை 31 வரை மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி- உச்சநீதிமன்றம்

Default Image

ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை மட்டுமே ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க அனுமதிக்கலாம் என ஒருமனதாக முடிவெடுத்து, 5 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்து நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை மட்டுமே ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், நிலைமையை பொறுத்து ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்காக மீண்டும் ஆலையை இயக்கவேண்டுமா? என்பது குறித்து பிறகு முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 நிபுணர்கள் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ள நிலையில், அந்த ஐந்து நிபுணர்களை தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு தேர்வு செய்யும் என்று கூறப்பட்டது. அந்த குழுவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட காவல் கண்காளிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்